கோவையில் நேற்று செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவை பாஜக முழுமையாக வரவேற்கிறது. நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாததால் தேர்தலில் தனியாக நிற்கிறார். எனவே நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக பெறும். நாம் தமிழர் கட்சி 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்காது. வெறுப்பை விதைத்து கட்சி நடத்த முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.