நடிகர் சூர்யாவின் ரசிகை ஐஸ்வர்யா. இவர் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில் அங்கு கடந்த சில தினஙக்ளுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐஸ்வர்யா உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அவருடைய தந்தை மற்றும் தாய்க்கு சூர்யா உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அதில் அவர், “ஒரு சக மனிதனாகவும், தந்தையாகவும் உங்கள் குடும்பத்திற்கு தோள் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறேன். உங்கள் மகள் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்திருக்க வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.