பிரேசில் பாடகர் டார்லின் மொரைஸ் சிலந்தி கடித்ததில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முகத்தில் சிலந்தி கடித்ததால் அவர் கடுமையாக நோய்வாய் பட்டதாகவும் ஒவ்வாமை காரணமாக இறந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு உயிரிழந்துள்ளார். அவரது மகளும் சிறந்து கிடையால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் டார்லின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.