சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் நேற்று  புழல் சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
இந்நிலையில், சிறையில் தாயுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவதுடன், மழலையர் பள்ளிகளைத் தொடங்கவும், பிணைத் தொகை செலுத்த முடியாமல் ஜாமின் பெற்று சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.