கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள எடுயூரப்பா, சில தினங்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் எனது வீட்டிற்கு வந்தார். என்ன பிரச்சனை என்று அவரிடம் நான் கேட்டேன்.

பின் அந்த பெண் எனக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார் என்று கூறினார். மேலும் அவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.