தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தக்காளி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும் மக்களின் பட்ஜெட்டை தவிடு பொடியாக்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை பெரிய மார்க்கெட் மற்றும் சின்ன மார்க்கெட் போன்ற பகுதிகளில் தக்காளியில் மற்றும் இஞ்சி விலை அதிகரிப்பை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.