தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீப காலமாகவே சில பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு கன்னட படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன் மீது வரும் தொடர் சர்ச்சைகளுக்கு தற்போது ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் பரப்புகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. அதிகமாக உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி இருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை உடற்பயிற்சி செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக கூறுகிறார்கள்.

நான் என்னதான் செய்வது. ஒருவேளை நான் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா. என்னிடம் உங்களுக்கு என்ன தான் பிரச்சனைகள். உங்கள் வார்த்தைகள் என்னை மனரீதியாக மிகவும் துன்புறுத்துகிறது. ஹிந்தி பாடலை உயர்வாகவும் தென்னிந்திய பாடலை அவமதிக்கும் விதமாகவும் பேசியதாக கூறுகிறார்கள். நான் அப்படி பேசவே இல்லை. எனக்கு வாரிசு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். நான் வாரிசு படத்தில் ஒரு அங்கமாக மட்டுமே இருக்க விரும்பினேன். அதற்கு காரணம் தளபதி விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ரஷ்மிகாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.