சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும், ஏப்ரல் 23ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 910 கூடுதல் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.