இராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த 2 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், “சாலை விபத்தில் அரசுப் பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று நடந்த இந்த விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.