கர்நாடக மாநிலம் உத்தர கண்ணடா மாவட்டம் கார்வார் தாலுகாவில் உள்ள சித்தாரா என்ற கிராமத்தில் வாயில் மொபைல் சார்ஜர் கேபிளை வைத்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத பெண் குழந்தை சார்ஜர் கேபிளை வாயில் வைத்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் தாய் சஞ்சனா சார்ஜரை சொருகியதாகவும் அதை அவர் அணைக்க மறந்து விட்டதாகவும் கூறினார். அப்போது சார்ஜர் கேபிள் அருகில் படுத்திருந்த குழந்தை தெரியாமல் வாயில் போட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகின்றது. கார்வார் ஊரக காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.