இந்தியத் திருமணங்கள் தங்களின் பிரம்மாண்டத்திற்கு உலகப் புகழ் பெற்றவை. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், திருமணப் பந்தல் ஒரு பெரிய அரண்மனை போலவே காட்சியளிக்கிறது. அதன் பரப்பளவு எவ்வளவு அதிகம் என்றால், ஒரு கவுண்டரில் இருந்து மற்றொரு கவுண்டருக்குச் செல்ல விருந்தினர்கள் நடந்து செல்ல முடியாமல் திணறுகின்றனர். இதற்காகத் திருமண ஏற்பாட்டாளர்கள் பந்தலுக்குள்ளேயே கார்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

​விருந்தினர்களும் உறவினர்களும் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல இந்த கார்களில் ஏறிப் பயணம் செய்கின்றனர். ‘wedding.vlogger’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது திருமணப் பந்தலா அல்லது கும்பமேளா மைதானமா?” என்று கிண்டலாகக் கேட்டு வருகின்றனர். இன்றைய காலத்தில் திருமணங்கள் என்பது வெறும் சடங்காக இல்லாமல், ஒரு மாபெரும் ‘இவென்ட்’ ஆக மாறிவிட்டதையே இது காட்டுகிறது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.