கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா மாவட்டம் அம்பி கோலா கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் கவுரவமா அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று மனோஜ் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக கௌரம்மா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் .

சாப்பாடு பரிமாறாமல் செல்போனில் பேசிக் கொண்டதால் பேசிக் கொண்டிருந்ததால் மனோஜ்க்கு கோபம் வந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த மனோஜ் கௌரம்மாவின் கழுத்தை நெரித்தார். இதனால் மூச்சு திணறி கௌரம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌரம்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.