சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்து வருவாய் செந்தில்குமார் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் செந்தில் குமாருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.