தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார் யோகி. இப்படி பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு, தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யோகிபாபு முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் என்றதனால் அடிக்கடி முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில்,சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற யோகிபாபு அங்கிருந்த அர்ச்சகருக்கு கை கொடுத்த போது தீண்டாமையை எதிர்கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள யோகி பாபு, யாரோ வேண்டுமென்றே இவ்வாறு தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை எனக் கூறியுள்ளார்