தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி. இவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றி இப்போது பகிர்ந்துள்ளார். இதுபற்றி சாய்பல்லவி பேட்டி அளித்ததாவது “நான் 7ம் வகுப்பு பயிலும்போது என் வகுப்பு மாணவன் ஒருவனை மிகவும் பிடித்திருந்தது. அவன் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டு காதல் கடிதம் எழுதினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இவருக்கு விபூதி சாப்பிடும் வித்தியாசமான பழக்கம் உள்ளதாகவும் தனக்கு விபூதி என்றால் மிகவும் பிடிக்கும் என்று எப்பொழுதும் பையில் விபூதி வைத்திருப்பதாகவும் கூறினார். அந்த விபூதி சாதாரணமானது அல்ல என்றும் பிரத்யேக மரத்தினால் செய்யப்பட்டதாகவும் மிகவும் சுவையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.