பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சா பாலோமாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் நிலசரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இதுவரை 300க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 60 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நில சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.