நாடு முழுவதும் இன்று 74 -ஆவது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ரஷ்யா அதிபர் புதின் தனது குடியரசு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குடியரசு தின வாழ்த்துக்களை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதார, சமூக தொழில்நுட்ப மற்றும் அறிவியல்,  பிற தளங்களில் இந்தியாவின் சாதனைகள் பரவலாக அறியப்பட்டவை. உங்களுடைய நாடு சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பெருமளவில் பங்காற்றி வருகிறது.

அதே போல் மண்டல மற்றும் சர்வதேச செயல் திட்டங்களில் முக்கிய விவகாரங்களை பற்றி பேசுவதில் பெரும் பங்கு வகிக்கிறது  என தெரிவித்துள்ளார். நாம் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மை அளிக்கும் இருதரப்பு ஒத்துழைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்திட முடியும் என நான் நம்புகிறேன். மேலும் ரஷ்யா மற்றும் இந்தியா என இரு நாடுகளின் நட்பு ரீதியிலான மக்களின் அடிப்படை நலன்களை சந்தேகமில்லாமல் அது பூர்த்தி செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.