சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகின்றன. இதனால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு சபரிமலையில், தரிசனத்துக்காக கூடுதலாக ஒருமணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், பக்தர்களுக்கு விநியோகிக்க கூடுதலாக 42 லட்சம் பிஸ்கட்டுகள், காபி, வெந்நீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது