மராட்டிய மாநில மன்னரான சத்ரபதி சிவாஜி முடி சூடிய 350வது ஆண்டுவிழா பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதுபற்றி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது” சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 350-வது முடிசூட்டு விழாவானது வரும் ஜூன் 1 மற்றும் 2-ம் தேதி ராய்காட்டில் கொண்டாடப்படும்.

இந்த விழா மாநிலத்திற்கு ஒரு உத்வேகம் ஆகும். இதை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த வருடம் முழுவதும் மாநிலத்தில் அனைத்து பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று அவர் கூறினார். அதோடு மராட்டிய அரசு சார்பாக ஆக்ராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச மையமானது அமைக்கப்படும் என்று கூறினார்.