தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டியில் நேற்று 101 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தன்னுடைய 35 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தென் ஆப்பிரிக்காவுடன் சதம் அடித்து சச்சினனின் சாதனை சமம் செய்து தனது பிறந்த நாளில் புதிய சாதனையை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வரும் நிலையில் விராட் கோலியின் பிறந்த நாள் பரிசாக தங்கம் முலாம் பூசப்பட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் பரிசளித்துள்ளது. .