கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நிவேதா என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி (23), 3மாமன்ற கூட்டங்களுக்கு மேல் வராததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பு உண்டு. அவரின் விளக்கத்தை மாநகராட்சி ஏற்றுக்கொண்டால் பதவியில் தொடரலாம், இல்லாவிட்டால் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி பொறுப்பில் முழுமையாக ஈடுபடுபவர்கள் மட்டுமே பதவியில் இருப்பார்கள் எனவும் மற்றவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.