விருதுநகர் மாவட்டம் கல்வி மடை பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவில் உணவு அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.