இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தற்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களின் மாத ஓய்வுதியம் 3000 ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊழியர் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பணியாற்றிய கோவில்களிலேயே அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஓய்வு பெற்றோருக்கு பொங்கல் கருணைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு தமிழக முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.