சமீபத்தில் கோழிக்கறியை வாங்கி வந்து காவல் நிலையத்தில் வைத்து சமய சமைத்த காவலர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. கேரளாவில் இளவந்திட்டா என்ற காவல் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் பல சர்ச்சை எழுந்து காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் கேரள மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இப்படியான நிலையில் அதே காவல் நிலையத்தில் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். கோழி கறி சமைத்து சர்ச்சையில் சித்திய போலீசார் பாரம்பரிய ஓணம் பண்டிகையை கொண்டாடி சர்ச்சைக்கு பதிலாக தற்போது நல்ல பெயரை பெற்றுள்ளனர். தற்போது இவர்களின் ஓணம் கொண்டாட்டம் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.