பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மூவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது.