கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு கோடை வெப்பம் கொளுத்தும் என்பதால் கோடை காலத்திற்கே உரிய வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானம் மற்றும் ஏசி உள்ளிட்டவை ஒரு பக்கம் தங்கள் பொருட்களின் விலையை ஏற்றுவதுடன் மறுபக்கம் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்ப அட்டகாசமான புதிய தயாரிப்புகள் மற்றும் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி மார்ச் மாதம் சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.