கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மோப்ப நாய்களை வரவழைத்தும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.