உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா மாறுபாடு JN 1 வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார மையம், இந்த புதிய வகை கொரோனாவால் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இதனால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் பண்டிகை காலத்தில் போதிய முன்னெச்சரிக்கை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.