
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புவனகிரி மாவட்டம் பிள்ளையப் பள்ளியில் பர்வதம்-ஆஞ்சநேயலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீராமுலு என்ற மகன் இருந்துள்ளார். இவர் மொத்த சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் காதல் விவகாரம் குறித்து அறிந்து சிறுமியின் பெற்றோர் பலமுறை தங்களது மகளை கண்டித்தனர். ஆனாலும் சிறுமி அவ்வபோது தனது காதலரை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமியின் நெருங்கிய உறவினரான சிண்டு என்பவர் அடிக்கடி சிறுமியை மிரட்டி வந்துள்ளார். அவர் ஸ்ரீராமுலுவிடம் பணம் தராவிட்டால் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறி விடுவேன் என மிரட்டி 1.35 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இருப்பினும் சிண்டு காதலர்களை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார். ஒருபுறம் பெற்றோர் திருமணத்திற்கு சமாதிக்கவில்லை. மறுபுறம் சிண்டு தொடர்ந்து தொந்தரவு அளித்து வருகிறார்.
இதனால் காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்காக ஸ்ரீராமுலு செல்ஃப் டிரைவ் நிறுவனத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து தனது காதலியுடன் கான்பூரில் உள்ள புறநகர் சுற்றுசாலையில் சர்வீஸ் ரோட்டில் சென்று உள்ளார். இதனையடுத்து பெட்ரோலை உடலில் ஊற்றி காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணிவதற்குள் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.