ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பெயர் நீக்கப்படும் என்பதோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்பதோ தவறான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ளது.

ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்கள் வழங்கப்பட கூடாது என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.