குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என அனைவருக்கும் ஏற்ற விதமாக பல திட்டங்களை எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் இந்த திட்டங்களில் ஒன்றுதான் சரல் பென்ஷன் திட்டம். இது நல்ல ஒரு தேர்வாக இருக்கும். பழமையான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஓய்வூதிய திட்டம். சந்தை இணைக்கப்படாத மற்றும் ஒற்றை பிரிமியம் திட்டம். கணவன் அல்லது மனைவி இருவரும் இணைந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

அதே சமயம் தனியாகவும் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர் விரும்பினால் அந்த பாலிசியை சரண்டர் செய்யலாம். இதில் இணைவதற்கு குறைந்தபட்ச வயது 40. அதிகபட்ச வயது 80. இந்த திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் பென்ஷன் பெரும் விருப்பமும் இருக்கிறது. மாதாந்திர ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் .காலாண்டு ஓய்வூதியத்திற்கு 3000 ரூபாயும் அரையாண்டு ஓய்வூதியத்திற்கு 6000 ரூபாயும் வருடாந்திர ஓய்வுதியாதிற்கும் 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் அதிகபட்ச ஓய்வூதிய தொகைக்கு வரம்பு எதுவும் கிடையாது.