பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர் பிராண்ட் அமைப்புடன் தொடர்புடையவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் பரிசு வழங்கப்படும் என NIA-வின் போஸ்டர் ஒன்று வெளியானது. பரிசுத்தொகை மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த முகமது அலி உள்ளிட்டவர்கள் பற்றிய தகவல் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.