மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராயின் உத்தரவை அமல் படுத்தும் விதமாக தனியார் டிவி சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி உள்ளன.  அதன்படி, தனியார் சேனல்கள் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால அரசு கேபிள் டிவி கட்டணமும் உயரும் என்று ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அரசு கேபிள் டிவி கட்டணம் மார்ச் மாதம் முதல் உயர வாய்ப்புள்ளதாக ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 100 இலவச சேனல்களுக்கு ரூ.130 கட்டணம், ஜிஎஸ்டி சேர்த்து 155 வசூலிக்கப்படுகிறது.