ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் எல்லைக் கோட்டிற்கு அருகே பிடித்த அந்த ‘மின்னல் வேக’ ரிலே கேட்ச் கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்துள்ளது.

ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து சிக்ஸருக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாங்-ஆன் திசையில் நின்றிருந்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடதுபுறம் பாய்ந்து பந்தைப் பிடித்தார். ஆனால், பவுண்டரி கோட்டைத் தான் தாண்டிவிடுவோம் என்பதை அடுத்த நொடியே உணர்ந்த அவர், சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த சேவியர் பார்ட்லெட்டிடம் பந்தை லாவகமாகத் தூக்கி வீசினார்.

“>

 

இதைப் பார்த்த டக்அவுட்டில் இருந்த ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரே சில விநாடிகள் வாயடைத்துப் போயினர். ஐயரின் இந்த அபாரமான விழிப்புணர்வால் ஹர்திக் பாண்டியா வெளியேற, ஒட்டுமொத்த மும்பை ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.