தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வில் பங்கேற்க இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றியவர்கள் ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். டிசம்பர் 24 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில் இந்த பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் மூலமாக டிசம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.