சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்கள் சென்னையிலேயே இருக்க ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.