
உலக அளவில் கூகுள் குரோம் செயலியை தினம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது கூகுள் குரோம் செயலியின் பழைய வெர்ஷனில் சைபர் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ள மத்திய அரசு பாதிப்பிலிருந்து தப்பிக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி எச்சரித்துள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய இணைய லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.