நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழலில், தேமுதிகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்த அவர், விஜயகாந்த் நினைவிடத்தை கூகுளில் தேடினால்  (Vijayakanth Temple) என்று காட்டும் எனக் கூறினார்.

அந்த சமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவர் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க செய்தது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.