2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அவ்வகையில், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து இல்லாமல் பயிர்களை காக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.