சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி கவிஞரும் நடிகருமான சினேகன் வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஜெயலக்ஷ்மி வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.