கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் வரும் பாட்டு விஜய்யை குத்தி காட்டுவது போல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய குட்டி கதை மூலம் ரஜினி பதிலளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதேபோன்று குட்டி கதையை சொன்னார் ரஜினி அதில் குறைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயுமில்லை. நம் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டே போயிட்டு இருக்க வேண்டும்.

கழுகை பார்த்து காக்கா பறந்து கொண்டே இருக்கும். கழுதை பார்த்து நாமும் உயரமாக பறக்க வேண்டும் என்று காக்கா நினைக்கும். ஆனால் காக்காவால் உயரமாக பறக்க முடியாது . இப்படி குறைக்கும் நாய், சீண்டும் காக்கா என்று ரஜினி பொதுவாக தான் கூறினார். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சீண்டும் விஜய்யை தான் காக்கா என்று ரஜினி கூறியிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரவலாக வருகிறது. இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள விஜய் இடம் கேட்டு அவர் வர மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.