கும்ப ராசி அன்பர்களே,

இன்று நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். நேசித்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள்.. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கனவுகள் நினைவாகும் கற்பனை திறன் அதிகரிக்கும். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற ஆசைகள் மனதில் தோன்றும். எந்த செயலையும் சிந்தித்து செய்வது நல்லது. தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் விலகி இருப்பது நல்லது. இல்லத்தில் வாக்குவாதத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன்   அனுசரித்து செல்லுங்கள்.

இன்று பெண்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். எது சரி எது தவறு என்று சிந்தித்து செயலாற்றுவது நல்லது. இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். காரியங்களை நிதானமாக செய்து முடிப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும் .

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிஷ்ட எண்   : ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை மற்றும் மஞ்சள் நிறம்