கேரளாவில் லாட்டரி சீட்டுக்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அந்த மாநில அரசு லாட்டரி விற்பனை செய்து வரும் நிலையில் வாரத்தில் ஏழு நாட்களும் குழுக்கள் நடைபெற்று ஒரு கோடி வரை பரிசுத்தொகை  அளிக்கப்பட்டு  வருகிறது. இந்த நிலையில் பண்டிகை நாட்களிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது .சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு 25 கோடி பரிசுகள் இருந்தது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனரான சுனில் குமார் என்பவர் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறார்.

இந்த லாட்டரிக்கு முதல் பரிசு ஒரு கோடி. ஆனால் இவர் வாங்கிய லாட்டரி சீட்டை வீட்டில் குப்பை தொட்டியில் போட்டு உள்ளார். இந்த நிலையில் திடீரென்று இவருக்கு ஒருவேளை நமக்கு லாட்டரி சீட்டு விழுந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். அப்போது இவருக்கு முதல் பரிசுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் வீட்டிற்கு சென்று தன்னுடைய லாட்டரி டிக்கெட் தேடியிருக்கிறார் .அதன் பிறகு குப்பையில் இருந்து லாட்டரி சீட்டை எடுத்து கொண்டு சென்றுள்ளார். கடனில் இருக்கும் தன்னுடைய வீட்டை மீட்டு பின்பு அந்த வீட்டை  எடுத்து கட்டுவதற்கும் முடிவு செய்து இருக்கிறார்கள்.