மத்திய, மாநில அரசுகள் எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கல்வி செலவும் அரசால் ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரி எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு கழகம் சார்பாக அபிஷேக பாகத்தில் அம்பேத்கரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மாநில முதல்வர் ரங்கசாமி, அம்பேத்கரின் பிறந்த, வாழ்ந்த மற்றும் படித்த இடங்கள் புனிதா ஸ்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்ல விரும்புவர்களுக்கான முழு செலவை அரசே ஏற்கும். அதோடு எஸ் சி பிரிவை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயின்றால் அவர்களுடைய கல்விக்கான முழு செலவையும் அரசை ஏற்கும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.