தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு கட்டணமானது ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. தேர்வு நடத்தும் செலவினங்கள் அதிகரிப்பதால் தான் தேர்வு கட்டணமும் உயர்த்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார் . இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பழைய தேர்வு கட்டணமே வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான தேர்வு கட்டணம் குறித்த ஆலோசனை செய்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.