தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த  திட்டத்தில் மேலும் 1.04 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் 2வது கட்ட திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்து கல்லூரியில் இந்த திட்டதை தொடங்கி வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.