சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அர. சக்கரபாணி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.