மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2 ஆம் தேதியே நடைபெற உள்ளது. இதனை அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரிபுராவில் நாங்கள் வெற்றிபெற்றால் கல்லூரி பெண்களுக்கு ஸ்கூட்டி பைக்கினை இலவசமாக வழங்குவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்திருக்கிறார்.   தேர்தலில் வெற்றியை தட்டி தூக்குவதற்காக காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருகின்றனர்.