தமிழகத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் இந்த மாதத்திற்குள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பயோமெட்ரிக் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. வெளியூரில் இருப்பவர்களும் உடனடியாக கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.