சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான கணக்கெடுப்பு பணிகளை முடிக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும் உடனடியாக இத்திட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.